13.06.2011

உயர உயர சோதனையும் வரும்



* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள் ஆகியவை அனைவருக்கும்தேவை.

* உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன், உண்மையில் பிடிப்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இதைக் கடைபிடிப்பவர்கள் வெற்றி பெறுவது உறுதி.

* ஒவ்வொரு ஆன்மாவிலும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது, அதை வெளிக்கொண்டு வருவதே நம்
வாழ்க்கையின் லட்சியம். இதற்காக புறவாழ்க்கையிலும், அகவாழ்க்கையிலும் கட்டுப்பாட்டுடன் நடக்க
வேண்டும்.

* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும்.

* மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.

* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய். மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆண்டவனுக்கு நீ தொண்டு செய்தவனாகிறாய்
                                                
- விவேகானந்தர்