18.07.2011

கடவுளுக்கு நெருக்கமானவர்

* வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு முதலில் தன்னம்பிக்கையும், அடுத்தபடியாய் இறைவன் மீது நம்பிக்கையும் வேண்டும்.
* புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.
* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.
* உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான் கடவுளை மிக நெருக்கமானவன் ஆகிறான்.
* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, நன்மையும் தெய்வ பக்தியுமே சக்தி.
- விவேகானந்தர்