05.10.2011

இறுதிவரைக்கும் போராடு!

* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார், இதைத் தவிரத் தனியாக வேறு கடவுள் இல்லை என்பதை பல தவங்களுக்குப் பிறகு புரிந்து கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.
* நேர்மையானவர்களாக இருந்தும் லட்சியத்தை பின்பற்ற முடியவில்லை என்றால் அது நமது பலவீனத்தாலேயே ஆகும். லட்சியத்தை அடைய இறுதி வரை போராட வேண்டும்.
* தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். பொறாமையை விலக்கினால் இதுவரையிலும் செய்யாத மகத்தான செயல்கள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள்.
* வாழ்க்கையில் வெற்றி பெற உலகம் எவ்வளவு பெரியதோ, அந்த அளவுக்கு உங்கள் இதயத்தையும் விரிவாக்குங்கள்.
* உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. ஆனால், சேவை செய்ய முடியும், கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால், ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய்.
-விவேகானந்தர்