15.01.2012

நன்றி மறப்பது நன்றன்று


* காலத்தினால் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயனை எதிர்பார்க்காமல் செய்த உதவி உலகத்தைவிட பெரியதாகும்.
* இல்லறத்தில் சிறந்து வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து மதிக்கப்படுவான்.
* அன்பைப் பூட்டி வைக்க முடியாது. வேண்டப்பட்டவர்கள் துன்பமடைந்தால், அது தானே வெளிப்பட்டுவிடும்.
* தூய்மையான நிலை என்பது ஆசையை வெறுத்த நிலையாகும். இறைவனை விரும்புவதால் மட்டுமே இந்தநிலை கிடைக்கும்.
* ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. ஆனால், தீமையை உடனே மறந்துவிட வேண்டும்.
* மனதை அதன் வழியில் செல்லவிடாமல், தீமையில்இருந்து அகற்றி நல்ல வழியில் செல்லவிட வேண்டும்.
* அறிவுடையவர்கள் மட்டுமே எதிர்கால நிகழ்ச்சிகளை ஆராய்ந்து உணரும் சக்தி பெறுகின்றனர்.
* அழிவுவராமல் காக்கும் கருவி அறிவு. இது பகையால் எதிர்ப்பவர்க்கும் அழிக்க இயலாத உள் அரண் போன்றதாகும்.
* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் நான்கும் தம்மைச் சேராதபடி வாழ்வு நடத்துதலே தர்மம்.
- திருவள்ளுவர்