16.12.2012

லட்சியத்தை மாற்றாதீர்!

* இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.
* ஒரு லட்சியத்தை ஏற்றுக் கொண்டபின் அதைவிடப் புதுமையான ஒன்றைக் கண்டதும் பழையதைப் புறக்கணிப்பது அல்லது விட்டுவிடுவது உங்கள் ஆற்றலை சிதறடித்து விடும்.
* இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கணநேரம் இன்பமாக ஏதோ கிடைக்கலாம். ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்து விடும்.
* ஆன்மிகத்தைப் புறக்கணித்து விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினால், மூன்றே தலைமுறைகளில் நம் பண்பாடு அழிந்து விடும்.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
- விவேகானந்தர்