30.12.2012

மலர்ந்த முகத்துடன் இருங்கள்

* தெய்வம் எப்போதும் வந்து அருளைப் பொழிந்து கொண்டிருக்கும்படி மனக்கதவைத் திறந்து வையுங்கள்.
* யாரிடமும் பொய்மதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். நிஜமான மதிப்பே நிலைக்கும்.
* இடைவிடாமல் வேலை செய்து இந்த உலகப் பெருமைகளைப் பெற முயலுங்கள். முடியாவிட்டால் "விதிவசம்' என்று மகிழ்ச்சியோடு இருங்கள்.
* மனத்தளர்ச்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள். உள்ளும் புறமும் மாசில்லாமல் தூய்மையுடன் இருங்கள்.
* எப்போதும் மலர்ந்தமுகம், இனியசொல், தெளிந்த சித்தம் உள்ளவராக இருங்கள்.
* அறிவுக்கடலில் நாம் ஒரு திவலை. நம்மை அகங்காரம் என்னும் மாசு மூடியிருக்கிறது. இதை நீக்கிவிட்டால் தெய்வீக சக்தியும், ஞானமும் உண்டாகும்.
* மனதை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். உள்ளத்தில் உண்மை இருந்தால், வாக்கில் ஒளி உண்டாகும்.
- பாரதியார்