30.12.2012

நம்பித் தான் ஆக வேண்டும்

* ஒரு வண்டியைப் பார்த்தால் அதை வடிவமைத்தவன் ஒருவன் என்று நம்புகிறோம். ஆகவே, அவை தாமாகவே உண்டாகவில்லை. ஒரு உத்தேசத்தோடு ஒரு அறிவுஜீவி அதை உண்டாக்கி இருக்கிறான் என்று அறிகிறோம்.
* எதைப்பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அதேபோல் தான் இந்த பிரபஞ்சத்தை செய்த ஒருவன் இருக்கிறான் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும். எத்தனையோ விதமான பொருட்களை ஒன்று சேர்த்து உருவாக்கி, பயனும் தருகின்ற இயற்கையை, அதற்கேற்ப அமைப்பாகச் செய்து வைத்த ஒரு மகாசக்தி அல்லது பேரறிவு இருக்கத்தானே வேண்டும்.
* வானமண்டல நட்சத்திரங்களையும், கோள்களையும், அவற்றின் சுழற்சியையும் ஏற்படுத்தியது யார்? இவை எல்லாவற்றையும் ஒரே மகாசக்தி தான் இயக்கி கொண்டிருக்க வேண்டும். ஒரே காரண காரிய விதியில் இயற்கை முழுவதும் கட்டுப்பட்டு இருப்பதால், இதை செய்தது ஒரே பேரறிவு தான் என்பதும் புரியும்.
- காஞ்சிப்பெரியவர்