30.12.2012

கடவுளிடம் கேட்பதில் தவறில்லை

* இறைவனுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கவே வழிபடுகிறோம். பொதுவாக, நம் வழிபாடு எதையாவது கடவுளிடம் கேட்பதாகவே இருக்கும். சில சமயங்களில் நாம் கேட்டது கிடைக்கும். சில சமயங்களில் அது நிறைவேறுவதில்லை.
* நாம் பிரார்த்தனை செய்தும் பலனில்லை என்றால் கடவுளுக்கு கருணை இல்லையா என்று தோன்றும். நம் பூர்வ ஜென்மவினைப் பயனால் தான் துன்பம் ஏற்படுகிறது. பகவான் நாம் விரும்பும் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தால், மேலும் மேலும் அது வேண்டும், இது வேண்டும் என்று தான் பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.
* பகவானிடம் நம் விருப்பங்களை வேண்டி நிற்பதில் மேலான ஒரு நன்மை இருக்கிறது. ஆரம்பத்தில் நம் மனக்குறைகளை பகவானிடம் சொல்வதால் நமக்கு மனநிம்மதி உண்டாகிறது. நாம் சாமான்யர்களாக இருக்கும்
வரையில் நம் குறைகளை நிவர்த்திக்க பிரார்த்திப்பதும், வரங்களைக் வேண்டிக்கேட்பதிலும் தவறொன்றும் இல்லை.
*  குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் அடையும்.
- காஞ்சிப்பெரியவர்