01.01.2012

அதிகம் பெருமைப்படாதே!

* நல்ல நூல்களைப் படிப்பது, சொற்பொழிவுகளை நடத்துவது இவற்றைவிட அன்பால் மட்டுமே ஆன்மிகத்தில் மேம்படமுடியும்.
* தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு மனப்பூர்வமாக இறைவனை வழிபட்டால், அவன் இருப்பதை உணரலாம்.
* பக்தனாக விரும்புகிறவன், சொர்க்கத்தை அடைவது போன்ற ஆசைகளை துவக்கத்திலேயே விட்டுவிட வேண்டும்.
* வெறுப்பையும், கோப உணர்ச்சியையும் அடக்கும் போது, அந்த அளவிற்கு நல்ல ஆற்றலை சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த ஆன்மிக சக்தியாக மாறுகிறது.
* ஆன்மிக அறிவால் மட்டுமே நமது துன்பங்களை என்றென்றைக்கும் ஒழிக்க முடியும். மற்ற அனைத்து அறிவும் அதை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நீக்கும்.
* உன்னைப்பற்றி அளவுக்கு மீறி பெருமை கொள்ளாதே. பிறர் பெறாத அந்த புகழை உனக்கு அளித்தது இறைவனின் அருளே. அதை ஒரு வழிபாடாக செய்.
- விவேகானந்தர்