01.01.2012

வாழ்வதற்கு வேண்டிய தகுதி

* வாழ்க்கையில் எப்போதும் தூய்மை உடையவன் கடவுளுக்கு மிக நெருங்கியவனாகிறான்.
* ஏமாற்றுவதால் எதையும் செய்து விட முடியாது. அன்பாலும், ஆர்வத்தாலும், ஆன்மிக சக்தியாலுமே பெரிய செயல்களை நிறைவேற்ற முடியும்.
* பிறருக்காக செய்யும் சிறிய முயற்சி உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது, பிறருக்காக நன்மையை எண்ணுவதால் சிங்கத்தின் பலம் இதயத்திற்கு கிடைக்கிறது.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதியுள்ளவன்.
* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள். பணம் சக்தியல்ல, நன்மையும் தெய்வ பக்தியுமே சக்தி.
* தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டு பண்ணுவதே உண்மைக் கல்வி.
* அனைத்தையும் செவிசாய்த்துக் கேளுங்கள். உங்களுக்கு எது நல்லதென்று படுகிறதோ, அதை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* உயிரும், மனமும் இணைந்து செயல்பட்டால், எந்தச் செயலையும் செய்து வெற்றி பெறலாம்.
- விவேகானந்தர்