30.12.2012

நம்மால் சாதிக்க முடியும்!

* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள்.
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும்.
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்.
- விவேகானந்தர்