30.12.2012

உண்மையைப் பின்பற்றுங்கள்!

* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை.
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது.
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.
- விவேகானந்தர்