05.01.2013

பெயர் நிலைக்க வேண்டும்

* குழந்தை தன் தேவைக்கு தாயை நம்புவது போல், பெரியவர்கள் தன் தேவைக்கு அம்பிகையை நம்பி வாழ்கிறார்கள்.
* தெய்வத்தை அன்னையாக வழிபாடு செய்யும் போது, வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* அம்பாள் கருணையே வடிவானவள். அனைத்து சக்தியும் கொண்டவள். எங்கும் நிறைந்தவள்.
* உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த சக்தியும் திரண்டு நிற்கும் தெய்வீக வடிவே அம்பாள். அவளே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக இருக்கிறாள்.
* நல்ல லட்சியத்தைத் தேர்வு செய்து தைரியத்துடன் வீரனாக இருங்கள். வாழ்ந்து மறையும் போது, உங்கள் பெயர் நிலைத்திருக்கும் வகையில், அழியாத அறிகுறி ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.
* மகத்தான செயல்களைச் செய்வதற்காக இறைவன் நம்மை படைத்திருக்கிறான். அந்தச் செயல்களை நாம் செய்து முடிப்போம்.
* வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியும் வேண்டும். விடாமுயற்சி செய்பவன் கடலையே குடித்துவிடுவான்.
-விவேகானந்தர்